செவ்வாய், 27 ஏப்ரல், 2021

அனைத்து நோய்களுக்கும் இயற்கை மருத்துவம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

திங்கள், 1 பிப்ரவரி, 2021

பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்

2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.


அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

விவசாயம்
குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்வு
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகம்
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்.

போக்குவரத்து
சென்னை மெட்ரோ - நிதி ஒதுக்கீடு
சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும்.

வணிகம்
தமிழகத்தில் கடல் பூங்கா
தமிழகத்தில் கடல் பூங்கா அமைக்கப்படும்

பொது
சமூகப்பொருளாதார மறுஉருவாக்கம் தேவை
தற்போதைய நிலையில் சமூகப்பொருளாதார மறுஉருவாக்கம் தேவை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சுகாதாரம்
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்
நடப்பு நிதியாண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயம்
கால்நடை வளர்ப்புக்கு கடன்
கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு.

போக்குவரத்து
மதுரை-கொல்லம் நெடுஞ்சாலை
தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

பெரு நிறுவன வர்த்தக வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.

கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உபயோகமாக இருக்கும்.

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.

பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.

பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு

5 வருடங்களுக்கு ரூ 2.87 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் Jal Jeevan Mission நகர்ப்புற திட்டம் தொடங்கப்படும்
 
அனைத்து 4,378 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தண்ணீர் விநியோகம், 500 அம்ருத் நகரங்களில் 2.86 கோடி வீடுகளில் குழாய் இணைப்புகள் மற்றும் கழிவு நீர் மேலாண்மை இதன் மூலம் ஏற்படுத்தப்படும்.

பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்

14:09 (IST)

சென்னை சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்த ஆண்டே தொடங்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

13:36 (IST)

2021-22ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை GDP-ல் 6.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், 2020-21ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 9.5% ஆக இருந்ததாகவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார். 

13:24 (IST)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அறிவிப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை. 

13:22 (IST)

ஜி.எஸ்.டி பற்றி பேசிய நிர்மலா சீதாராமன், இந்த செயல்முறையை மேலும் எளிதாக்க அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றார். "காப்பர் ஸ்கிராப் மீதான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சில வாகன பாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்படும்." என்றும் தெஇவித்தார். 

13:18 (IST)

பட்ஜெட் உரை வாசிக்கப் பட்ட நிலையில் மும்பை பங்குச் சந்தை உயர்வு

13:17 (IST)

Budget 2021: பட்ஜெட் உரையில் திருக்குறள் வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!


13:15 (IST)

பட்ஜெட்  தாக்கலை தொடர்ந்து இன்று பங்குச் சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் குறியீடு 1,445 புள்ளிகள் உயர்ந்து 47,730 ஆக வர்த்தகம், நிப்டி குறியீடு 412 புள்ளிகள் உயர்ந்தது. 

13:13 (IST)

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை மதியம் 12.50 மணிக்கு முடித்தார். அவர் பிப்ரவரி 2020  பட்ஜெட் உரையை மக்களவையில் 162 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தார். அப்போது அவர், தனது பட்ஜெட் உரையின் இரண்டு பக்கங்களை மட்டுமே படிக்கவில்லை. 

13:09 (IST)

Budget 2021: சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் இந்திய பொருளாதாரம் காக்கப்பட்டது- நிர்மலா சீதாராமன்


13:09 (IST)

பட்ஜெட் 2021-22: உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்


13:06 (IST)

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களவையை ஒத்திவைப்பதாக சபாநாயர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்

13:04 (IST)

பட்ஜெட் 2021-ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை

13:00 (IST)

பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்

கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
 வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உபயோகமாக இருக்கும்.

 புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.

 பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.

 பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு


 உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு

12:58 (IST)

நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.



ஞாயிறு, 31 ஜனவரி, 2021

செல்வமகள் சேமிப்புத் திட்டம்

செல்வமகள் சேமிப்பு திட்டம் 

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம். 
இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது.

10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும்.
சரி 
இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் பற்றிய விவரங்கள் மற்றும் இத்திட்டதன் பயன்கள் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

செல்வமகள் சேமிப்பு திட்டம் எப்போது துவங்கப்பட்டது சுகன்யா சம்ரிதி திட்டம்  என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

யார் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்
செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும்.
இந்த திட்டத்தின்படி,  குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1,000/- செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம்.

இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் திட்டதை எடுத்த பெண் குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றி இருத்தல் வேண்டும்.

ஒரு வேலை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது மற்றும் கணக்கை அத்துடன் உரியக் காலத்திற்கு முன்னரே மூடப்படும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் முதலீட்டு முறை  பணம் மற்றும் செக் வாயிலாக பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லாமல் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில்  மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் எத்தனை ஆண்டுகள் வரை துவங்கலாம்  ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1,000/- இக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணம் செலுத்தலாம்.

இது குறைந்தபட்சம் 1,000/- ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1,50,000/- ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6% வட்டி தற்போது வழங்கப்படுகிறது.

இந்தக் கணக்குகளை துவங்க உள்ளவர்கள் எல்லா மாதமும் 10-ம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வேலை தவறினால் வட்டி குறைந்துவிடும்.

 முதலீடு அளவுகள்:-
செல்வமகள் சேமிப்பு திட்டம்:- குறைந்தபட்சம் ரூ.250/- முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும்.

ஏதேனும் அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் போது அந்த தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம்.

இந்த சேமிப்பு கணக்கை தொடர முடியாத போது என்ன ஆகும்?
குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான, வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும்.

இடை நிறுத்தப்பட்ட கணக்கை மீண்டும் துவங்குதல் 
கணக்கை இடை நிறுத்தப்பட்டு இருக்கும் போது 50 ரூபாயினை அபராதம் செலுத்தி விடுப்பட்ட கணக்கினை மீண்டும் துவங்கலாம்.

வருமான வரி விலக்கு உண்டா?
:செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் குழந்தைகள் பேரில் முதலீடு செய்யும் தொகைக்கு பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம்.

முதிர்வு தொகையை எப்போது பெறலாம்  இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகையை 21-ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம்.

மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

 கணக்கை இடமாற்றுதல்:-
 கணக்கை வேறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம்.

இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


மாதம் மாதம் நாம் செலுத்தும் தொகை இறுதியாண்டியில் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை இந்த அட்டவணையில் பார்க்கலாம் வாங்க.



புதன், 27 ஜனவரி, 2021

உங்களுடைய வருமான வரியை சேமிக்க கூடிய முதலீட்டுத் திட்டங்கள்

வருமான வரி சட்டத்தின் படி இந்த 2020 21 நிதி ஆண்டில் நாம் கடைசி  நேரத்தில் வந்து இருக்கிறோம் இந்த சமயத்தில் நம்முடைய வருமான வரியை சேமிப்பதற்காக நம்மில் நிறைய பேர் புதிய முதலீடு  திட்டங்களை செய்ய ஆரம்பித்திருக்கிறோம் இந்தியா முழுவதும்  ஊதியம் பெறும் நபர்கள் வருமான வரி  செலுத்தக்கூடிய பிரிவின் கீழ் வருவதால் இந்த நிதி ஆண்டில் கடைசி காலாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரை தங்கள் முதலீட்டு ஆதாரங்களை தங்களுடைய நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

 உங்களுடைய வரிச் சுமையை குறைக்க உதவ பல சிறப்பான திட்டங்கள் உள்ளன அவற்றில் பெரும்பாலானவை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி யின் கீழ் கிடைக்கின்றன.
பிரிவு 80 சி பல முதலீடுகளை உள்ளடக்கியது இதன் மூலம் உங்கள் மொத்த வருமானத்தில் வருமான வரி  விலக்குகளை கோரலாம்.
 ஆனால் இதன் அளவு ஒரு நிதியாண்டில் ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் வரை இருக்கும் எனவே உங்கள் வருமான வரிக்கான முதலீடுகளை செய்யும் போது நாம் நினைவில் வைத்துக்கொள்ள கூடிய சிறந்த திட்டங்களை பார்க்கலாம்.

1)பொது வருங்கால வைப்பு நிதி PPF Public Provident Fund  இது ஒரு நீண்டகால வரி சேமிப்பு திட்டம் ஆகும் இதில் ஒவ்வொரு ஆண்டுக்கும் நீங்கள் செய்த முதலீட்டு தொகைக்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதம் வழங்கப்படுகிறது இது 15 வருடங்களுக்கு பின் கிடைக்கக்கூடிய ஒரு திட்டமாகும்.
பிபிஎஃப் கணக்கில் நீங்கள் பெறும்  வட்டிக்கு எந்த விதவரியும் கிடையாது மற்றும் நிதியாண்டில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை பிரிவு 80 சி யின் கீழ் நீங்கள்  கிளைம் செய்யலாம் தற்போது பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது பி பி எஃப் மற்றும்  என்எஸ்சி போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கு  வட்டி விகிதங்களை ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் மாற்றாமல் இருக்கப்போவதாக நாட்டின் பொருளாதார பாதுகாப்பு துறை Department of Economic Affairs (DEA) டிசம்பர் 31, 2020 .அன்று
சுற்றறிக்கை கொடுத்துள்ளது 

 
 எந்தவொரு பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் அல்லது தபால் நிலையங்கள் வழியாக பிபிஎஃப் கணக்கைத் திறக்க முடியும்.  ஒரு நிதியாண்டில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ .500 மற்றும் அதிகபட்சமாக ரூ .1,50,000 முதலீடு செய்யலாம்.  மேலும், வைப்புத்தொகையை மொத்தமாக அல்லது தவணைகளில் செய்யலாம்.

 2)தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)National Savings Certificates
 ஒரு தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது என்.எஸ்.சி ஐந்து ஆண்டுகள் நிரந்தர முதலீடு மற்றும் ஒரு நிலையான வட்டி விகிதத்துடன் வருகிறது.  இது உங்கள் அருகிலுள்ள எந்த தபால் நிலையத்திலும் திறக்கப்படலாம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் வங்கி நிலையான வைப்புத்தொகையை (FD) Fixed Deposit விட  NSC அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.

 பிரிவு 80 சி இன் கீழ் என்.எஸ்.சி மீதான வட்டி தானாகவே ரூ .1.5 லட்சம் என்ற வரம்பில் கணக்கிடப்படுகிறது, மேலும் வேறு எந்த முதலீடுகளும் வரம்பைப் பயன்படுத்தாவிட்டால் இதில் வரி விலக்கு அளிக்கப்படும்.

 தற்போது, ​​என்.எஸ்.சி-யில் கிடைக்கும் வட்டி விகிதம் 6.8 சதவீதமாக உள்ளது, இது ஆண்டுதோறும்  அதிகரிக்கப்படுகிறது, ஆனால் முதிர்ச்சியடையும் போது அந்த வட்டி  அளிக்கப்படுகிறது, இந்தியா  தபால் துறை இணையதளத்தில் இந்தத் திட்டம் கிடைக்கும்.

 இந்த என்எஸ்சி திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூபாய் 1000 முதல் முதலீடு செய்ய வேண்டும் மேலும் ரூபாய் நூறு மடங்குகளில் உதாரணமாக ரூபாய் 1100 1200 மற்றும் பல நீங்கள் முதலீடு செய்யலாம் மேலும் இத்திட்டத்தில் அதிகபட்ச வரம்பு இல்லை
 
 3)தேசிய ஓய்வூதிய  திட்டம்(என்.பி.எஸ்)national pension scheme
 இத்திட்டம்  அரசாங்கத்தின் தன்னார்வ ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும்   voluntary Pension  savings scheme இந்தத் திட்டம் பொது, தனியார் மற்றும் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்கிறது மற்றும் சந்தாதாரர் திட்டமிட்ட சேமிப்புகளுக்கு வரையறுக்கப்பட்ட பங்களிப்பை வழங்க அனுமதிக்கிறது, 
இதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை ஓய்வூதிய திட்டம் பாதுகாக்கிறது.
 ஓய்வுபெறும் வயது வரை மக்கள் தங்கள்  பணி புரியும் காலம் முழுவதும் ஓய்வூதிய கணக்கில் முதலீடு செய்ய என்.பி.எஸ் அனுமதிக்கிறது.  ஓய்வூதியத்தில், முதலீட்டாளர்கள் மொத்த கார்பஸில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை திரும்பப் பெறலாம்.  என்.பி.எஸ் சந்தாதாரர் கார்பஸின் மீதமுள்ள தொகையை ஓய்வூதியத்திற்குப் பிறகு மாத ஓய்வூதியமாகப் பெறுவார்.  (PFRDA) Pension Fund Regulatory & Development Authority  என்பது என்.பி.எஸ் செயல்படுத்த மற்றும் கண்காணிப்பதற்கான நோடல் ஏஜென்சி ஆகும்.

 என்.பி.எஸ்-க்கு விண்ணப்பிக்கும் எவரும் இந்தியா போஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, அவரது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது  18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


 இந்த குறிப்பிட்ட திட்டத்தை  தங்கள் நிறுவனங்கள் மூலம் இணைத்துக் கொள்ள முடியும் மற்றும் வரி சலுகைகளைப் பொறுத்தவரை, இது பிரிவு 80 சிசிடி (1) இன் கீழ் 10 சதவீத சம்பளம் (அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி Dearness allowance) வரை வரி விலக்கு அளிக்கிறது.  80 சி.சி.இ. பிரிவு 80 சிசிடி (2) இன் கீழ் முதலாளி வழங்கிய சம்பளத்தின் 10 சதவீதம் (அடிப்படை + டிஏ) வரை வரி விலக்குக்கு ஊழியர் தகுதியுடையவர். பிரிவு 80 சி.சி.இ.யின் கீழ் வழங்கப்பட்ட ரூ .1.50 லட்சத்தின்  வரம்பு வரை கொடுக்கப்படும்

4) ELSS நிதி Equity Linked Savings Schemes
 ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள் அல்லது ஈ.எல்.எஸ்.எஸ் என்பது வரி சேமிப்பு பரஸ்பர நிதிகள் Mutual fund ஆகும், அங்கு வரி செலுத்துவோர் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி கீழ் ஒரு நிதியாண்டில் ரூ .46,800 வரை சேமிக்க முடியும்.  ELSS நிதிகள் மூன்று வருடங்கள் மட்டுமே  பூட்டுதல் காலம் Locking Period காலத்துடன் வருகின்றன, இது அனைத்து வரி சேமிப்பு நிதிக் கருவிகளிலும் மிகக் குறைந்த பூட்டுதல் காலமாகும்.

 இந்த நிதிகள் பங்குச் சந்தைகள் மூலம்  செயல்படுவதால் மற்ற வரி சேமிப்பு திட்டங்களை விட அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.  அவர்கள் தங்களுடைய நிதியை குறைந்தபட்சம் 80 சதவீதத்தை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள், இது சந்தைகளின் கணிக்க முடியாத தன்மையைக் கொடுக்கும் அதே நேரத்தில் ஆபத்தான முதலீடாக அமைகிறது.

 இது பங்குச் சந்தைகளின் வளர்ச்சிக்கு உட்பட்டது என்பதால், இந்த நிதிகளின் வருமானம் தற்போது நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (எல்.டி.சி.ஜி)LONG-TERM CAPITAL GAINS வரிக்கு 10 சதவீதத்திற்கு உட்பட்டது, இதன் பலன்கள் ரூ .1 லட்சத்திற்கு மேல் இருந்தால்.

 ELSS பங்கு சந்தை ஆபத்துக்களை எதிர்நோக்கி சிறப்பாக செயல்படும் நபர்களுக்கு  மிகவும் பொருத்தமானவை மற்றும் அதன் நன்மைகளை பெற  வேண்டுமானால்  நாம் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யப்பட வேண்டும்

5) 5 ஆண்டு வங்கி எஃப்.டி.
 வரி சேமிப்பானது நிலையான வைப்புத்தொகை (எஃப்.டி)  Fixed Deposit என்பது ஐந்து ஆண்டுகள் காலம் மட்டுமே மற்றும் ஒரு நிலையான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது.  ஐந்தாண்டு எஃப்.டி.யில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு நபர் பிரிவு 80 சி இன் கீழ் ரூ .1.5 லட்சம் வரை வரி சலுகைகளை கோரலாம்.

 இந்த எஃப்.டி.களை இந்தியாவில் உள்ள எந்த பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கியிலிருந்தும்   சேமிப்பு கணக்கில் ஆரம்பிக்க முடியும், ஆனால் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாறுபடும்.  மேலும், இந்த நிதிக்  திட்டம் தனிநபருக்கு வரிச் சலுகையை வழங்கப் போகிறது என்றாலும், இந்த எஃப்.டி.களுக்கான வட்டியில் இருந்து மூலத்தில் (டி.டி.எஸ்) Tax Deductible Sources கழிக்கப்படும் மற்றும் வரி முதிர்ச்சி Tax Maturity நேரத்தில் பொருந்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 வங்கிகள் முழுவதும் வட்டி விகிதங்களின் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, இது மற்ற வருமான வரி சேமிப்பு  திட்டங்களுடன் ஒப்பிடும்போது முதலீட்டில் குறைந்த வருவாயை வழங்குகிறது.

 6)அலகு இணைப்பு காப்பீட்டு திட்டங்கள் (யுலிப்ஸ்)United Liked Insurance Plans 
 யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் அல்லது யுலிப் என்பது பங்குசந்தை மற்றும் காப்பீட்டின் கலவையாகும்.  ஒரு யுலிஐபியின் கீழ், காப்பீட்டு நிறுவனம் உங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை ஆயுள் காப்பீட்டிற்கு செலுத்துகிறது மற்றும் மீதமுள்ள ஒரு நிதியை ஈக்விட்டி அல்லது கடன் அல்லது இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது மற்றும் உங்கள் நீண்ட கால இலக்குகளுடன் பொருந்துகிறது.
 
 யுலிப்ஸ் 5 வருடங்கள் பூட்டப்பட்ட Locking Period காலத்துடன் வருகின்றன, இருப்பினும், காப்பீடு என்பது ஒரு நீண்ட கால தயாரிப்பு என்பதால், முதலீட்டாளர் பாலிசியின் நன்மைகளை பாதியில் நிறுத்த கூடாது , அவை முழு பாலிசி காலத்திற்கும் 10 முதல் 15 வரை இருக்கலாம்.  ஆண்டுகள் ஆயினும்கூட, ஒரு நபர் ஒரு நிதியாண்டில் அவர்  செலுத்தும் பிரீமியத்தில் பிரிவு 80 சி கீழ் ரூ .1.5 லட்சம் வரை வரி சலுகைகளை கோரலாம்.

 7)ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள் Life Insurance யுலிப்ஸைத் தவிர, எண்டோவ்மென்ட் பாலிசிகள் மற்றும் கால காப்பீடு ( Term Insurance) போன்ற பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளுக்கு செலுத்தப்படும் பிரீமியங்கள் அனைத்தும் பிரிவு 80 சி இன் கீழ் ரூ .1.5 லட்சம் வரை வரி சலுகைகளை வழங்குகின்றன, 
மேலும் மருத்துவ காப்பீடு Health Insurance 
 மருத்துவ காப்பீட்டின் மூலம் உங்களுக்கு வருமான வரிச் சலுகை 80சி பிரிவின் கீழ் 50,000 வரை நீங்கள் வரி சலுகை  பெறலாம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

💙💛💙💛💙💛💙💛💙💛💙💛

*💗உடல் நலம்...*

*கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்து கொள்வோம்..!!*

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol

80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

*கொலஸ்ட்ராலின் தன்மைகள்..*

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

*எது நல்ல கொலஸ்ட்ரால்?*

LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.

ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)

*கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்..*

Total Cholesterol <—>200 mgm%
மொத்த கொலஸ்ட்டிரால்

LDL Cholesterol <—>100 mgm%
குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

VLDLCholesterol <—>30 mgm%
மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

Triglycerides <130 mgm%
முக்கிளிசரைடுகள்

HDLP Cholesterol <50 mgm %
மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்


மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.

குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.

*கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்..*

*பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)..*

எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.

கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.

பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.

ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.

இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.

*ஒமேகா 3 உள்ள உணவுகள்..*

மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்

*ஒமேகா 6 உள்ள உணவுகள்..*

சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.

*எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?*

நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல் தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.

*கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:*

· சீரான உடற்பயிற்சி

· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.

· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.

· மது அருந்துவதைத் தவிர்ப்பது

· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.

· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.

· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .

· யோகாசன பயிற்சி செய்வது,

· தியானப் பயிற்சி செய்வது.

💐💐 Digital Tamil TV 💐💐


💙💛💙💛💙💛💙💛💙💛💙💛

வியாழன், 14 ஜனவரி, 2021

வாட்ஸப் சிக்னல் டெலிகிராம் எது சிறந்தது முழுவிபரம்

டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் சேவை மற்றும் தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும் டெலிகிராம் அதிக வசதிகள் மற்றும் பாதுகாப்பு முறைமைகள் அதிகமாக உள்ளது..
சரி நேராக விசயத்திற்கு போலாம்.டெலிகிராம் சிறந்த வசதிகளை கூறுகிறேன்.
1. முதலில் டெலிகிராம் மேகக்கணினி(cloud computing) முறையில் இயங்குகிறது. அதனால் டெலிகிராம் ஐ ஒரே நேரத்தில் வெவ்வேறு வகையான os ல், வெவ்வேறு சாதனத்தில் இயக்கலாம்.இதனால் நீங்கள் ஒரு செய்தி மெபைல் டைப் செய்து pc இல் edit செய்யலாம். பொதுவாக டெலிகிராம் complete on line backup mode ல் இயங்கி வருகிறது.ஸ்மார்ட்போனில் ஒரு பதிவை தட்டச்சி செய்துகொண்டிருக்கும்போது பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், உங்கள் tablet கருவியில், அல்லது கணினியில் அந்த பதிவை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடரலாம்.. மறுமுறை முதலிலிருந்து தட்டச்சி செய்யவேண்டிய அவசியமில்லை…மேலும் இந்த வசதியினால் உங்களுடைய அனைத்து chat பதிவுகளும் மொபைலில் local storage ஆக save ஆகாமல், அனைத்தும் cloud storage ல் சேமிக்கப்படுவதால், உங்களுடைய முக்கிய பதிவுகள் அனைத்தும் அழியாமல் எத்தனை ஆண்டு வேண்டுமானாலும் பாதுகாப்பாக இருக்கும். Telegram ல் இயல்பாகவே Complete On-Line Backup வசதி உண்டு. Telegram செயலியின் உருவாக்கமே / இயக்கமே மேகக்கணினியை சார்ந்து இருப்பதால், இயற்கையாகவே அனைத்துப்பதிவுகளும் (Secret Chat தவிர்த்து) பாதுகாப்பான சர்வர்களில் backup ஆகின்றன. Whatsapp-ல் உள்ளது போல் பதிவுகளை backup செய்வதற்கு Google Cloud account ஐ integrate செய்யவேண்டிய அவசியமில்லை. உங்கள் மொபைல் internal memory மற்றும் SD கார்டு மெமரியையும் Whatsapp-ஐ போன்று வீணாக்குவதில்லை. Whatsapp ல் அனைத்துமே local storage என்பதால், மொபைல் போனை format செய்தாலோ , மொபைல் தொலைந்து போகும் சூழல் ஏற்பட்டாலோ, பதிவுகள் அனைத்தும் திரும்ப பெற முடியாது... Google cloud மூலம் cloud ல் சேமிப்பது போன்ற மாயையை whatsapp ஏற்படுத்தினாலும், அது 3-rd party service integration முறையில் இருக்கிறதே தவிர, Telegram-ன் சொந்த cloud sync கட்டமைப்பிற்கு ஈடாகாது... .உதாரணத்திற்கு: Whatsapp ல் web version பயன்படுத்த, நீங்கள் இன்டர்நெட் பிரவுசரில் Whatsapp-ஐ ஓபன் செய்து, அதில் தெரியும் QR Code ஸ்கேன் செய்து, பின் அது இயங்க, உங்கள் மொபைல் போனிலும் Whatsapp செயலி online ல் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். அதுவும் சரியான, முழுமையான network இணைப்பு, இன்டர்நெட் இணைப்பு இல்லையென்றால், இந்த Whatsapp Web Version பயன்படுத்துவது மிகவும் சிரமம். Retry, Retry என்று வெறுப்பேத்தும்…அந்தமாதிரி இம்சைகளே Telegram App ல் கிடையாது. போனே இல்லாமல், அல்லது போனில் Telegram app ஐ நிறுவாமலும் Telegram Web Version ஐ பயன்படுத்தலாம்.
2. Complete Security, Secret Chats and Custom Privacy Options:
Security, Encryption, Privacy ஆகிய இந்த வார்த்தைகள் இந்த வருட துவக்க காலத்திலிருந்தே அதிகமாக பேசப்பட்டது. அதற்கு காரணம் சமீபத்திய Whatsapp செயலியின் update-ல் வெளியிட்ட பிரைவசி பாலிசி தான். அதில் குறிப்பிட்டதாவது, Whatsapp செயலியையும் முகநூலையும் (Facebook) ஒன்றிணைக்கப்போவதாகவும், இரண்டு applicationகளும் பயனாளர் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் எனவும் குறிப்பிட்டிருந்தது.இதை பல நாடுகளை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்தனர். Facebook நிறுவனம் Whatsapp நிறுவனத்தை கைப்பற்றியது முதல் இதுபோன்ற இணைப்பு நேரும் என்று பலர் கருதினாலும், Facebook நிறுவனம் அதை மறுத்துவந்த நிலையில், இதுபோன்ற அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த இணைப்பை ஏற்படுத்துவதில் எதிர்ப்பு இருப்பினும் Facebook அதனை கண்டுகொள்ளாததால், பலரும் Whatapp செயலி போன்ற மாற்று செயலி தேடுகையில், Telegram செயலியே சிறந்த தேர்வாக அமைந்தது. அதற்கு காரணம் Telegram செயலியின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, எண்ணற்ற வசதிகள் முதலியவை. அதனை தொடர்ந்து Telegram செயலியின் பயனாளர் விகிதம் தொடர்ந்து ஏற்றுமுகமாகவே அமைந்துள்ளது.
Telegram செயலியில் உள்ள பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகள் குறித்து பார்ப்போம்: (Privacy and Security Options)
01. Hide Last Seen for Particular or Selected contacts
Whatsapp ல் Last Seen status ஐ Everyone, My Contacts, Nobody என்ற மூன்று optionகள் மட்டுமே இருக்கும். இதன் மூலம் Last Seen ஐ அனைவரும் பார்ப்பது, நமது மொபைலில் Contacts save செய்த நபர்கள் மட்டும் பார்ப்பது, அல்லது யாருமே பார்க்காதபடி set செய்வது. அதுதான் முடியும். ஆனால் Telegram ல் நாம் Everybody என்று set செய்தாலும் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்க்காதபடி set செய்யலாம். Nobody என்று set செய்தாலும், குறிப்பிட்ட நபர்கள் மட்டும் நமது Last Seen ஐ பார்க்கும்படி அமைக்கலாம்.
02. Avoid others adding to Groups without permissions
நம்மை பலமுறை நம் சொந்தங்களோ , நண்பர்களோ நாம் விரும்பாத பல whatsapp குழுக்களில் இணைப்பதுண்டு.. பின் நாம் அதிலிருந்து விலகினாலும் நம்மை மீண்டும் மீண்டும் பல குழுக்களில் இணைத்து அன்புத்தொல்லை செய்வர்.. இது போன்று Whatsapp ல் தடுப்பதற்கு, அந்த நபரையே Block செய்ய வேண்டும். ஆனால் Telegram ல் நம்மை யார் மற்ற குழுக்களில் இணைக்கலாம் வேண்டாம் என்று set செய்து வைக்கலாம். எந்த நபர்களையும் பகைத்துக்கொள்ளாமல். :-)
03. End to End Encrypted Secret Chats
Google Allo வில் incognito chat என்ற option இருப்பதுபோல், Telegram-மிலும் Secret Chat என்ற வசதி உள்ளது. அதன் மூலம், நாம் எந்த ஒரு தனி நபரிடமும் உரையாடுவதை, எந்த சர்வரிலும் சேமிக்காது, யாரும் இடைமறித்து தகவல் திருடாதவாறு, பாதுகாப்பான முறையில் தகவல் பரிமாறலாம். நாம் தகவல் அனுப்பும் கருவியிலும் , தகவல் பெறும் நபரின் கருவியிலும் மட்டுமே அந்த தகவல் இருக்கும். வேறெங்கும் அந்த தகவல் சேமிக்கப்படாது. கூடுதல் வசதி என்னவென்றால், இந்த secret chat வசதி மூலம் நாம் அனுப்பும் தகவலை, நாம் யாருக்கு அனுப்பினோமா அவரால் கூட அதை மற்றவருக்கு forward செய்வதோ, Screenshot எடுப்பதோ முடியாது. அப்படி அவர் screenshot எடுக்க முற்பட்டால் Telegram நமக்கு அந்த தகவலை உடனே தெரிவிக்கும். எந்த அளவிற்கு பாதுகாப்பு பாருங்கள்…!Whatsapp ல் இதுபோன்று எந்த வசதியும் இல்லை. அவர்கள் அனைத்து தகவலுக்கும் End to End Encryption உள்ளது என்கிறார்கள், பின் எப்படி Government உளவுத்துறை , நமது தகவல்களை படிக்கிறது, தவறான செய்தி பதிந்தால் கைது செய்கிறது என்பது தெரியவில்லை. Whatsapp ன் தகவல் பரிமாற்ற பாதுகாப்பை, இதை கேள்விப்பட்டும் நாம் நம்புகிறோம் என்பது தான் வியப்பின் உச்சம். :-)
04. Timed Self-Destructed Secret Message
இந்த வசதி மூலம், நாம் ஒருவருக்கு அனுப்பும் தகவல் நாம் செட் செய்த நேரத்தில் தானாக அழியும்படி அனுப்பலாம். உதாரணமாக, திருமணத்திற்காக வரன் தேடும் பையன் வீட்டுக்காரங்களிடம், பெண் வீட்டார் பெண்ணின் புகைப்படத்தை அவர்கள் குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்க்கும்படி செட் செய்து அனுப்பினால், பெண்ணுடைய புகைப்படம் தவறானவர்கள் கைகளில் , தேவையில்லாமல் பகிரப்படுவதை தவிர்க்கலாம். இது உதாரணம் தான், பல வகையில் இந்த வசதி பலபேருக்கு உதவும்.
05. Two-Factor Authentication
2FA என்று சொல்லப்படுகிற இந்த வசதி, நீங்கள் ஜிமெயில் செயலியில் பார்த்திருப்பீர்கள். நான் ஏற்கனவே Telegram ஒரு Cloud Computing முறையில் இயங்கும் செயலி எனவும், பல கருவிகளில் (Smartphone, Tablet, Laptop என) ஒரே account பயன்படுத்தி, அனைத்திலும் ஒரே நேரத்தில் online ல் இருக்கலாம் என்றேன். அப்படி இருக்கும் போது, நாம் எந்தெந்த கருவிகளில் account ஐ பதிந்தோம் என்பதையும், நமக்கு தெரியாமல் யாரேனும் நமது account ஐ பயன்படுத்தாதவாறு பாதுகாக்கும் முறைதான் இது. இதை Enable செய்வது மூலம், வேறு ஒரு கருவியில் Telegram ல் நமது account ஐ பயன்படுத்த நேரிட்டால், வழக்கமான OTP message உடன் கூடுதலாக இன்னொரு Password-ம் பூர்த்தி செய்தால் தான் அந்த கருவியில் பயன்படுத்த இயலும். இது போன்றும் Whatsapp ல் கிடையாது.
06. In-Built Passcode Lock for App
இது இன்னொரு சூப்பரான பாதுகாப்பு அம்சம். நம் செல் போனை நாம் PIN no போட்டு பாதுகாப்பது போல் , இந்த Telegram செயலியை open செய்யும் போதும் PIN no கேட்கும்படி செட் செய்யலாம். இதனால், போனின் PIN no போட்டு ஒருவருக்கு போனை பயன்படுத்த குடுத்தாலும், அந்த நபர், நமது Telegram உரையாடல்களை பார்க்காதபடி தடுக்க முடியும். மேலும் குழந்தைகள் விளையாட்டாக மொபைலை பயன்படுத்தினாலும், அவர்கள் தெரியாமல், Telegram குரூப்பிலோ , வேறு நபர்களுக்கோ தேவையில்லாத மெசேஜ் களை அனுப்புவதை தடுக்கலாம். குழந்தைகள் போனை வைத்து விளையாடும்போது, whatsapp குழுக்களில் அவர்கள் தெரியாமல் போட்டோவோ , ஏதோ தட்டச்சி செய்து போடுவதை பார்த்திருக்கிறோம்… அது Telegram ல் தடுக்கலாம்.
07. Username Option — Thus Hiding Phone Number from Unknown persons
Telegram செயலியில் நமக்கென ஒரு நிரந்தர பெயரை பதிவு செய்துகொள்ளலாம். அதாவது Facebook ல் நம் account ற்கு , ஒரு நிரந்தர அடையாள பெயர் வைப்பதுபோல்..( Rajamanikkam Ramasamy ) மாதிரி… Telegramமிலும் , இதுபோன்று நிரந்தர Username செட் செய்துகொள்ளலாம். இதன் மூலம், உங்கள் மொபைல் எண்ணை மற்றவருடன் பகிராமல் உங்கள் Username ஐ ( Rajamanikkam ramasamy(O+) ) குடுத்து மட்டும் chat செய்துகொள்ளலாம். இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ள பாதுகாப்பு வசதி.
எவரேனும் உங்களுக்கு Username பயன்படுத்தி தவறான மெசேஜ் அனுப்ப நேர்ந்தாலும், அவர்களை நிரந்தரமாக Block செய்துவிடலாம். அந்த நபரால் உங்களை தொடர்புகொள்ள இயலாது. ஏனென்றால், அவர்களால் உங்கள் மொபைல் எண்ணை பார்க்க இயலாது. ஆக, block செய்த பின் நம்பரை வைத்து call செய்வது, மிரட்டுவது போன்ற தொந்தரவுகள் கிடையாது.
08. Account Self-Destruction after particular time period
இந்த வசதி மூலம், உங்களுடைய Telegram account ஐ நீங்கள் குறிப்பிட்ட காலம் சில காரணங்களால் பயன்படுத்தாவிட்டால் தானாக account delete ஆகும்படி செட் செய்து கொள்ளலாம்.
09. Completely Open Privacy Policy
Whatsapp ல் உள்ளது போல் குளறுபடியான Privacy Policy இதில் கிடையாது. Whatsapp ஒரு Commercial செயலி, அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு ஏற்றவகையில் policy ஐ மாற்றிக்கொண்டே இருப்பர். நாம் facebook ன் privacy policy பற்றி பல ஊடகங்களில் நாறடித்தது அனைவருக்கும் தெரியும். Whatsapp ம் அவர்களுடையதுதானே.. Telegram ஒரு open source செயலி என்பதால், அந்த மாதிரி இல்லாமல், திறந்தநிலை பாலிசி யாகவே உள்ளது.
Security and Privacy options பற்றி பார்த்தோம். Telegram ன் அடுத்த தன்னிச்சையான வசதிகளை பார்ப்போம்.
03. Groups, Super Groups and Channels:
Whatsapp ல் Groups பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். குழு போன்று அமைக்கும் வசதி. Whatsapp ல் 256 நபர்கள் மட்டுமே ஒரு குழுவில் இருக்கலாம். Broadcast என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். Whatsapp ல் Broadcast மூலம் நமது Contacts ல் உள்ளவர்களுக்கு மட்டும் எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம்.
ஆனால், இந்த வசதிகளை கொஞ்சம் வித்யாசமாக, Telegram வழங்குகிறது.Telegram ல் குழுக்களை Groups மற்றும் Super Groups என்று இரண்டு வகையாக அமைக்கலாம். இது அல்லாமல், Channels என்ற வசதியும் உண்டு. அவற்றை பற்றி பார்ப்போம்.
Groups:
சிறிய குழுவாக இயக்குபவர்களுக்கு என்று இந்த வகை. இந்த குரூப்பில் 200 நபர்கள் வரை அதிகபட்சம் உறுப்பினர்களாக இருக்கலாம். இந்த குழுக்களை Private ஆக பயன்படுத்துபவர்களுக்கு என்ற நோக்கில் உள்ளது. அதாவது, பள்ளி தோழர்கள், நெருங்கிய உறவினர்கள், அலுவலக நண்பர்கள் என்று சிறிய, 200 நபர்களுக்கு கீழ் இணைத்து தகவல் பகிர்பவர்களுக்கு பொருந்தும். இந்த குழுவிற்கு என நிரந்தர Username அமைக்க முடியாது. Invite Link மூலம் மட்டுமே நபர்களை இணைய சொல்லலாம். அல்லது நாமாக குழுவில் நபர்களை இணைக்கலாம்.
Super Groups:
இந்த வகை குழுக்கள், 5000 நபர்கள் வரை அதிகபட்சமாக உறுப்பினர்களை கொண்டிருக்கலாம். இந்த குழுவிற்கு என்று ஒரு நிரந்தர Username அமைக்க முடியும். அதாவது, ShareWALL™ (இதில் @ShareWALL என்பது குழுவின் நிரந்தர பெயர்) என்று அமைக்கலாம். இதை Public ஆக share செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்ற நோக்கில் குழு துவங்குபவர்களுக்கு என்று ப்ரத்யேகமாக உள்ள வசதி. மேலும் இவ்வகை குழுக்களில், நாம் ஒரு பதிவை தவறுதலாக பதிந்துவிட்டால், அதை நம் போனில் delete செய்தால் அனைத்து உறுப்பினர்களுக்கும் delete ஆகும் வசதி உள்ளது.நாம் Whatsapp ல் பலர், ஒரு குழுவை ஆரம்பித்து, 256 நபர்கள் என குழு நபர் வரைமுறை முழுவதும் நிரம்பி, மற்றொரு குழு ஆரம்பித்து, அதற்கு குரூப்பெயர்-2 ,குரூப்பெயர்-3 என்று ஒன்றன்பின் ஒன்றாக துவங்கி , ஒரே பதிவை அனைத்து குழுக்களிலும் பதிவதை பார்த்திருக்கிறோம்…. இந்த மாதிரி தேவையில்லாத data waste ஐ 5000 நபர் வரை வைத்து குழு துவங்கும் வசதி telegram ல் நிச்சயம் பயன் தரும்.
Channels:
Whatsapp ல் Broadcast என்ற வசதி மூலம், நம் போனில் உள்ள contact களுக்கு அனைவருக்கும் மட்டுமே ஒரே நேரத்தில் மெசேஜ் அனுப்பமுடியும்.
Telegram ல் உள்ள இந்த Channel வசதியும் தகவல்களை Broadcast செய்வதற்காக உள்ளதுதான். ஆனால், Telegram Channel களில் (Unlimited) எண்ணற்ற நபர்களை இணைக்க முடியும். நிரந்தர பெயர் செட் செய்து கொள்ளமுடியும். Group லும் , Super Group லும் உறுப்பினர்களும் பதிவுகள் போடலாம். ஆனால், Channel ல் அதை create செய்தவர் மட்டுமே பதிவுகள் போட முடியும். உறுப்பினர்கள், பதிவுகளை பார்வையிட்டு, மற்ற குழுக்களில் வேண்டுமானால் Forward செய்யலாம்.உதாரணமாக, இது ஒரு தொலைக்காட்சி சேனல் போன்றது தான். விருப்பப்பட்ட சேனலை வைத்தால், அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சியினை மட்டுமே நாம் காண முடியும். நம்மால் டிவி யில் ஏதும் செய்ய முடியாது அல்லவா. இந்த வசதி மூலம், பொது குழுக்களான, தமிழ் மருத்துவம், சமையல் குறிப்புகள், சினிமா செய்திகள் என்று சன் டிவி , ராஜ் டிவி என்று சேனல்களுக்கு நிரந்தர பெயர் இருப்பதுபோல் நிரந்தர பெயர் வைத்து சேனல்களை அமைக்கலாம். Business பயன்பாட்டிற்கு கூட இந்த வகை சேனல்கள் பெரிதும் பயன்படும்.
04. Rich Multimedia - Stickers, GIFs, Photo Editor, Audio, Video Player
Telegram ல் மேம்பட்ட பல்லூடகம் (Rich Multimedia) support இருக்கிறது. Hike Messenger ல் உள்ளதுபோல் Stickers பயன்படுத்த முடியும். மேலும் GIF அனிமேஷன்கள், Smiley கள் , Telegram ன் உள்ளேயே இயங்கும் Internal Audio, Video player கள், GIF அனிமேஷன் உருவாக்கும் creator, HD விடியோவை சிறிய file size ஆக சுருக்கும் வீடியோ compressor கள், File Compression ஆகாத,image clarity குறையாத Photo பதிவேற்றங்கள், Mask கள், Photo Editor கள் என இதன் மல்டிமீடியா வசதிகள் நீண்டு கொண்டே போகிறது.
இந்த மாதிரி வசதிகள் Whatsapp உட்பட எந்த தகவல் பகிரிகளிலும் கிடையாது.
05. Rich Message Communication — BOTs, Message Editing / Revoking
Telegram ல் மட்டுமே முதன் முதலில் BOT Support எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உதவியில் செயலியில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு இருந்தது. பின்னர் தான் இவ்வசதி Facebook Messenger, Google Allo, Wine Private Messenger போன்ற செயலிகளில் வர தொடங்கியது. மேலும் பல வசதிகளும் (Invite Link, Forward Arrow, 2FA, Message Editing / Revoking, BOT Support போன்றவை) , Telegram செயலியில் இருந்து copy அடித்தே பல செயலிகள் அந்த வசதியினை தங்கள் செயலிகளில் ஏற்படுத்தி இருக்கிறது.
Telegram ல் BOT Support இருப்பது போல் மேலே சொன்ன வேறு எந்த செயலியிலும் அவ்ளோ சிறப்பாக இருப்பதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு BOT உள்ளது Telegram ல். ஆடியோ file ஐ தேட, வீடியோ file ஐ தேட , விக்கிபீடியா article தேட, குழுவை நிர்வகிக்க, youtube வீடீயோக்களை பதிவிறக்க, ஆங்கிலம் கற்றுக்கொள்ள, ஒரு மொழியிலிருந்து, இன்னோரு மொழியில் கோப்புகளை மொழிபெயர்க்க, எந்த நாட்டுடைய நேரம் மற்றும் Weather Report பார்க்க, நாம் courier அனுப்பிய parcel ன் shipment track செய்ய என பல Value Added சேவைகள் உண்டு. BOT களுக்கென்றே வெப்சைட் உள்ளது இந்த லிங்க்கில் . (Whatsapp ல் BOT support வருவதற்கே பல காலம் ஆகும்.. ;-( )
அது போல், Telegram ல் எந்த ஒரு பதிவையும், Chat ஐ யும் அனுப்பிய பிறகு 48 மணி நேரம் வரை Edit செய்யும் வசதியும், பெறுபவர்கள் பார்க்கும் முன் Delete செய்யும் வசதியும் உள்ளது. இந்த வசதி இனிமே தான் Whatsapp ல் வரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். :-(
6. Instant Views, HTML5 Games, Telegraph Publishing Platform, etc..
Telegram ன் வசதிகளை எழுதுவதற்கே கை வலிக்கிறது. வசதிகளை எப்போதும் பெருக்கிக்கொண்டே போகிறது இந்த Telegram செயலி. சமீபத்திய Update ல் Instant View, மற்றும் Telegraph என்னும் Publishing வசதிகளை அறிமுகப்படுத்தி அசத்தியது. இந்த வசதிகள் மூலம் website களை , telegram உள்ளேயே , browser உதவி இல்லாமல் , page load தாமதம் ஆகாமல் Instant ஆக Blog Article களை படித்து பார்க்க முடியும். News தயாரிப்பு நிறுவனங்களுக்கும், news களை படிக்கும் மக்களுக்கும் Telegraph என்னும் wordpress போன்ற blogging platform ஐ அறிமுகம் செய்திருக்கிறது. இது மாபெரும் வசதி.மேலும் Telegram ன் உள்ளேயே Games விளையாடும் வசதியினையும் அறிமுகம் செய்து சிரியவர்களையும் அசத்தி இருக்கிறது.
7. File Sharing — Any Types, Any Formats and Any Size
Telegram ல் மட்டுமே எந்த வகை கோப்பாக இருந்தாலும் பகிரும் வசதி உண்டு. மேலும் 1.5 GB வரையிலான கோப்புகளை அனுப்பலாம். HD படங்களே பகிர முடியும்.
MP3, MP4, JPG, MOV, AVI, ZIP, RAR, DOC, XLS, PPT, PDF, என எந்த format ல் file கள் இருந்தாலும் support ஆகும்.
அதிலும் மற்ற செயலிகள் காட்டிலும் DATA optimization technique மூலம் Data செலவு பெரிதாக ஆகாமல் மேற்கூறிய பெருவாரியான வசதிகளையும் தருவதென்பது மற்ற செயலிகளால் முடியாத காரியம். Whatsapp மற்றும் Facebook செயலிகளை நீக்கினாலே நமது மொபைல்களில் 30% சதவிகிதம் Battery Charge நீடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் Telegram இயங்குவதற்கு அதிக திறன்வாய்ந்த phone களோ, அதிக battery Chargeஜோ தேவையில்லை.
இப்படி பல வசதிகள் Telegram ல் இருப்பினும் சிலர் நீண்ட நாள் Whatsapp பயன்படுத்திவிட்டு, திடீரென Telegram செயலியில் மாறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இது ஒரு adamant மற்றும் addicted behaviour என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
Whatsapp ல் உள்ள Voice Calling, மற்றும் Video Calling வசதிகள் தான் உங்களை Telegram செயலிக்கு மாறுவதை தடுக்கிறது என்றால், Video மற்றும் Voice Calling வசதியை HD தரத்தில் Telegram செயலிஅடுத்த update ல் வழங்க இருக்கிறது. HD துல்லியதில் அழைப்புகளை மேற்கொள்ளலாம். Whatsapp ன் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகள் வசதி பல பேருக்கு சலிப்பை தந்ததே தவிர வசதியாக இருந்ததில்லை. விட்டு விட்டு கேட்கும் அழைப்புகள். நாம் பேசுவது நமக்கே கேட்கும் கொடுமைகள், வீடியோ அழைப்பை துவங்கிய உடனே போன் hang ஆகும் செயல் என வசதி என்ற பெயரில் நம் மொபைல் போனையும் ,data வையும் , நேரத்தையும் பதம் பார்த்ததே அதிகம்.
Whatsapp போல் Telegram ஒரு Commercial application இல்லாததால், விளம்பர செலவுகள் செய்வதில்லை. எங்களை போன்ற பயன்படுத்துவர்கள் வாயிலாகவே இந்த Telegram இவ்ளோ பயனாளர்களை கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்களும் சீக்கிரம் மாறிவிடுங்கள் மக்களே!.
புதிது புதிதாக வசதிகள் எங்கு கிடைக்கிறதோ பயன்படுத்தி பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். பழகிவிட்டோம் என்பதற்காக பழைய மாவையே அரைத்துக் கொண்டிருக்காதீர்கள் . மாற்றம் ஒன்றே நிரந்தரம். :-)
இந்த Telegram App ஐ Android போனில் Play Store றிலும், Apple iOS போனில் App Store றிலும் search option சென்று Telegram என்று தட்டச்சி செய்தால் கிடைக்கும் பக்கத்தில், பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.